Lord Siva

Lord Siva

Wednesday 15 August 2012

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு  ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து. 
கூந்தலை வருடுவது
பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை க்கு தள்ளப்படுகின்றனர்.
கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதா ய் உரசிப் பாருங்களேன். அவர்களு க்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உண ர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.
காதுகளை லேசாய் உரசி உசுப்பே ற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிக ரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார் களாம். கண்ணத்தில் மென்மை யாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோ லம் போடலாம்.
கழுத்தில் காம உணர்வு அதிகம்
கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தி ல் மெதுவாய் கைகளை வைத்து இதமா க வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதி யில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கை களால் தொடுவதைவிட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப் புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கைகளின் அக்குள் பகுதி
பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காண ப்ப டுகின்றனவாம். அங்கே தொட் டு விளையாடுவதும், மென்மையா ய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித் தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்பு கின்றனராம்.
வயிற்றில் உற்சாகம்
முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்க ளை அநேகம் பெண்கள் விரும்புகின் றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சிய டையச் செய்யும் என்கின்றனர் நிபுணர்  கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்ன தாய் முன் னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத் தான் பெண்கள் விரும்புகின் றனராம்.
பாதங்களில் சரணடையுங்கள்
பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிர ம்பியவை. அங்கே கைகளால் விளை யாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பி னை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொ தி பாதத்தில் முகம் புதைத்து மென்மை யாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்ற னர் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக் குவியல்களை கொண்டுள்ள து. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொ ட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன் .

Sunday 12 August 2012

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?மாற்று சிகிச்சை முறைகள் பயனளிக்குமா?



Posted On Aug 12,2012,By Muthukumar

ஆஸ்த்மா பற்றி......

ஆஸ்மா என்பது என்னெவென்று தெரியாதவர்கள் இருக்க முடியாது. இழுப்பு, தொய்வு, முட்டிழுப்பு எனப் பலவாறாக அழைப்பார்கள். இது சுவாசத் தொகுதியைத் தாக்கும் ஒரு நோயாகும்.


  • எந்த வயதினரையும் தாக்கக் கூடியது என்பதுடன் 
  • நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும். 
  • தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. 
  • அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

 அறிகுறிகள் 

  • இருமல்
  • இழுப்பு
  • மூச்சு எடுப்பதில் சிரமம்
  • நெஞ்சு இறுக்கமாக இருப்பதாக உணர்தல்
போன்றவை இதன் அறிகுறிகளாகும்.


அடியோடு அறுத்தல்

நோய் அறிகுறிகள் இருப்பவருக்கு, 'உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கு' என மருத்துவர் சொன்னவுடன் நோயாளியின் உடனடிப் பிரதிபலிப்பு 'இதை அடியோடு அறுக்க என்ன செய்யலாம்?' என்பதுதான்.

ஆனால் அடியோடு அறுக்க முடியாது என்பது கசப்பாக செய்தியான போதும் தவிர்க்க முடியாத உண்மையாகும்.
  • இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. 
  • அவற்றைக் கொண்டு நோயை நன்கு கட்டுப்படுத்தலாம். 
  • ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம். 
  • ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும். அன்றி மருந்துவத்தின் செயற்பாட்டால் அல்ல.

'ஆங்கில மருத்துவம் செய்து வேலையில்லை' என்று எண்ணி சித்த, ஆயர்வேத, யுனானி, அக்யூபங்கசர் என நாடுபவர்கள் இருக்கிறார்கள்.
  • அவை எவற்றினாலும் நோயை முற்றாக அறுக்க முடியாது. 
  • அது மட்டுமல்ல, கடுமையான பத்தியங்கள் இருந்தாலும் அவற்றால் கிட்டும் பயன் மிகக் குறைவே. 
  • அவற்றால் பெருமளவு பலனில்லை என்பதை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துகளுக்கான அதிகார சபையும் (FDA) கூறுதிப்படுத்துகிறது.

மாற்று மருத்துவ முறைகளும் ஆஸ்த்மாவும்

அக்யூபங்கசர்


அக்யூபங்கசர் ஆஸ்தாவுக்கு ஏற்ற சிகிச்சை என்று சொல்வதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது என்கிறது அந்த ஸ்தாபனம்.
  • அக்யூபங்கசரால் ஒரு சிலரில் மருந்துகளின் அளவை குறைக்க முடிந்திருக்கிறது, 
  • அறிகுறிகள் குறைந்திருந்தன, சுகமாக இருப்பதாக உணர்ந்தனர் என ஓரிரு ஆய்வுகள் கூறிய போதும், 
  • பெரும்பாலான ஆய்வுகள் அக்யூபங்கசரால் எந்தவித பிரயோசனமும் இல்லை என்கின்றன.

சுவாசப் பயிற்சிகள்

பலவிதமான சுவாசப் பயிற்சிகள் உள்ளன. எமது பாரம்பரிய யோகசனம் முதலாக சீன, மேலைநாட்டு முறைகள் (Papworth Method and Buteyko Breathing Technique) எனப் பல.
  • இவை நோயின் தீவிரத்தை குறைப்பதாகத் தெரிகின்றபோதும், 
  • நல்ல பலன் அளிக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை. 

ஆயினும் இது உடலுக்கு எந்தப் பாதகாமான விளைவுகளையும் ஏற்படுத்தமாட்டாது என்பதால் வழமையான மருந்துகளுடன் இணைத்துச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.

மூலிகைகள் சார்ந்த மருந்துகள்


சுதேச மருத்துவ முறைகளான சித்த, ஆயள்வேத, யுனானி, சீன மருத்து முறைகளில் பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் உள்ள சில வேதியல் பொருட்கள் ஆஸ்மாவின் அறிகுறிகளைக் குறைக்கக் கூடும்.

உதாரணமாக Ma huang என்ற சீன மூலிகையில் ephedrine என்ற வேதியல் பொருள் இருக்கிறது. இது ஒரு காலத்தில் ஆஸ்த்மாவிற்கு சிகிச்சையாக மாத்திரைகளாக உபயோகிக்கப்பட்டபோதும் அதன் இருதயம் சார்ந்த பக்கவிளைவுகள் காரணமாக பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது.

தேயிலையில் தியோபிலின் (theophylline) எனும் வேதியில் பொருள் சிறிதளவு உண்டு. இது இப்பொழுதும் பயன்பாட்டில் உள்ள ஒரு மருந்து ஆகும். மருந்து இதில் இருக்கிறது என எண்ணி தேநீரை அண்டாக் கணக்கில் குடித்தால் என்னவாகும்? சுகம் கிடைக்காது! வேறு நோய்கள்தான் தேடி வரும்.

இதேபோல வேறு பல மூலிகைகளில் ஸ்டிரொயிட் (Steroid) வகை மருந்துகள் உள்ளன. எதில் எந்த மருந்து எந்தளவு இருக்கிறது என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. எனவே மூலிகை மருந்துகளைத் தனியாகவோ அல்லது வழமையான மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்தும்போது ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

மாற்று சிகிச்சைகளின் பயன்பாடுகள் பற்றிய விஞ்ஞான பூர்வ விளக்கங்களுக்கு     Asthma and Complementary Health Practices

இவற்றைத் தவிர boswellia, tylophora indica, magnesium supplements, omega-3 fatty acids, Radix glycyrrhizae, vitamin C, and butterbur போன்ற மூலிகைகள், தாதுப்பொருட்கள், விற்றமின்கள் பலன் கொடுக்கும் எனப் பலர் நம்புகிறபோதும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்களுக்காக மருத்துவர் கொடுக்கும் மருந்துகளைக் கைவிட்டு, மூலிகைகளையும் ஏனைய முறைகளையும் உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

உங்களுக்கான மருத்துவம்

இன்றைய நிலையில் ஆஸ்த்மாவுக்கான சிறந்த மருத்துவம் உள்ளுறுஞ்சும் (Inhaler) மருந்துகள்தான். இவற்றில் பல வகைகள் உள்ளன. எது ஒருவருக்குப் பொருத்தமானது என்பதை மருத்துவர்தான் சிபார்சு செய்ய முடியும்.


ஒழுங்காக மருந்துகளை உபயோகித்தபோதும் சில வேளைகளில் ஆஸ்த்மாவின் தீவிரம் அதிகரிக்கலாம். இதைத் தடுக்க தூண்டும் காரணிகளை அறிந்து அவற்றைத் தவிர்பபது அவசியம். அதன் மூலமே நலமாக வாழலாம்.

இன்ஹேலர்கள் பற்றி மேலும் அறிய இன்ஹேலர்கள்

ஆஸ்த்மா தூண்டிகள் எவை?

அமெரிக்க குடும்ப மருத்துவ சங்கம் கீழ்கண்டவற்றைக் குறிப்பிடுகிறது. ஆனால் ஒருவருக்கு தூண்டியாக இருப்பது மற்றவருக்கும் தூண்டியாக அமையும் எனச் சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் தமது அனுபவத்தின் மூலமே கண்டறிய வேண்டும்.

  • ஓவ்வாமையை ஏற்படுத்தும் பூ மகரந்தங்கள், புற்கள், பூஞ்சணங்கள்
  • தடிமன் போன்ற வைரஸ் நோய்கள் தொற்றாமல் தம்மைப் பாதுகாத்தல்
  • சூழலில் உள்ள வளியை மாசுபடுத்தும் சிகரட் புகை, இரசாயனப் புகைகள், வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை தவிர்த்தல்.
  • விறகு எரித்தல். விறகு எரிக்கும்போது பல நச்சு வாயுக்களும், நுண்துகள்களும் வெளியேறுகின்றன. இவை சிலருக்கு தூண்டியாக அமையலாம்.
  • கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும்.
  • சைனஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகாதிருத்தல்.
  • நெஞ்செரிப்பு, வயிற்றெரிவு சாப்பாடு புளித்து மேலெழுதல் போன்ற அறிகுறிகள் குடலில் உள்ள அமிலம் மேலெழுவதைக் குறிக்கலாம். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு. இதைத் தடுக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
  • கடும் குளிர் காற்றுகளும் நோயைத் தூண்டிவிடுவதுண்டு
  • கடுமையான உடற் பயிற்சிகள் தூண்டக் கூடும். ஆயினும் அதன் அர்த்தம் உடற்பயிற்சிகள் செய்யக் கூடாது என்பதல்ல. மருத்துவ ஆலோசனையுடன் இன்ஹேலர்களை உபயோகித்துக் கொண்டு செய்ய வேண்டும்.
  • கடுமையான மனஅழுத்தங்களும் உணர்ச்சிவயப்படலும் தீவிரமாக்கும்.
Important Asthma Triggers கிளிக் பண்ணுங்கள் தூண்டிகள் பற்றி அறிய

இவை ஒருவருக்குத் தூண்டியாக அமைந்து நோயை தீவிரப்படுத்தலாம் என்பதால் அவற்றில் இருந்து விலகியிருங்கள். ஆனால் மற்றவருக்கு தூண்டியாக இருப்பது உங்களுக்கும் இருக்க வேண்டும் என்றல்ல.

ஆஸ்த்மா, அலர்ஜி, ஒவ்வாமை, எக்ஸிமா பற்றி மேலும் அறிய  எக்ஸிமா, ஆஸ்த்மா, அலர்ஜி நோய்கள் ஏன் அதிகரிக்கின்றன

எனவே மற்றவர்கள் சொல்லதைக் கேட்டு தேவையற்ற பலவற்றையும் தவிர்த்து உங்கள் வாழ்வைச் சப்பென்று ஆக்கிவிடாதீர்கள். உங்களுக்கு ஒவ்வாதனவற்றை நீங்களே அனுபவத்தில் தேடிக் கண்டுபிடியுங்கள்.

உங்களால் உங்களால் மட்டுமே உங்கள் ஆஸ்த்மாவைக் கட்டுப்பாடினுள் வைத்திருக்க முடியும் என்பதை மறவாதீர்கள்.

தாம்பத்தியத்தில் தன்னம்பிக்கையின் அவசிய‌ம்


மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களி ன் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப்படுத்த முடியாது என்றும் கவலைகொண்டு ஒருவித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
கிராமத்து பெண்களிடம் மட்டுமல் ல, நகரத்து பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body இமே ஜ் என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கி ருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்ப டுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என் றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணு க்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன. இந்த நம்பிக் கைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்பது பற்றித்தான் நாம் பார்க்கப் போகிறோம்.
இந்த நம்பிக்கைகள் எந்த காலகட்டத்தில் உரு வானவை என்பது இதுவரை கண்டறியப்பட வில்லை. விஞ்ஞானரீதியான சிந்தனைகளும், கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில் மக்கள் தங்களுடைய எல்லா சந்தேகங்களுக்கும் கற்பனையில்தான் விடைகளை கண்டு பிடித்தார்கள். இதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், பெரியம்மை நோய். இது ஒரு வைரஸ் கிருமியால்தான் வருகி றது என்பது கண்ட றியப்படாத கால கட் டத்தில், அம்மை என் றொரு தெய்வத் தின் கோபத் தால்தான் இது வருகிறது என்று உலகம் முழுவதும் நம்பினார்கள். இதுபோல் பல நூற்றுக்கணக் கான நம்பிக்கைகள். ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ச்சி யடைந்து, இதற்கெல்லாம் விடை கிடைத்துவிட்ட பிறகு ம், தலைமுறை தலைமுறையாக நன்றாக காலூன் றியிருக்கும் இந் த நம்பிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இதுபோல்தான் பாடி இமேஜ் பற்றிய நம்பிக்கைகளும். ஏதோவொரு காலகட்டத்தில் தோ ன்றி, இன்றுவரை வந்திருக்கின்றன. இண்டெர் நெட்டில் நூற்றுக்க ணக்கான சைட்கள் இதுபற்றி இருக்கின் றன என்றால், உலகம் முழுக்க இந்த நம் பிக்கை எந்த அளவுக்கு காலூன்றியுள்ள து பாருங்கள்.
இனி, இந்த நம்பிக்கைகள் சரியானவை தானா என்று பார்ப்போம். முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என் பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப் புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதா ரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப் படுவதில்லை. ஏனெனில், அப்போது அத னுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டு ம்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண் ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது. அதாவது, பெண் பிறப்புறுப்பின் உட்பகுதி இடைவெளி இல்லாம ல் நிரப்பப்படும் போதுதான், பிற ப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்ச கட்ட இன்பத்தைப் பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இத னடிப்படையில்தான் இந்த நம்பி க்கை உருவாகியுள்ளது. பெண் களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மே லும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுக ளைப் பார்ப்போம்.
சாராசரியாக உணர்ச்சிவசப்ப டாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் ஆண் பிறப்புறுப்பு 2 அங்குலம் முதல் 4 அங் குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படை ந்த நிலையில், 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பி ன் முதல் 2 இன்ச் பகுதிகளி ல்தான் அவ ள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அ டைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின் றன. ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ள ன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறை ப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிக மான நீளம் கொண்டதாகத் தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்பு றுப்பு அமைந்துள்ளது. என வே ஆண் பிற ப்புறுப்பு சிறிய தாக உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவி ல் ஒரு பிரச்னை யே இல்லை.
முதலில் செக்ஸ் வெறும் உட ல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல் படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதா ன் உண்மை. ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன்மேல் காதல்கொ ண்டு, எந்த அளவுக்கு அவன்மேல் விருப்ப மும் ஆசையும் கொள்கிறாளோ அந்தளவு க்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தி யடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின்மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள் ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன் னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களை யும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப் புறுப்பின் அளவுபற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றி விட்டான் என்று கவலைப் படுவது தேவை யில்லாதது. மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன் றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அள வுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக் குரியதோ அதுபோல்தான் இதுவும்.
சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறு ப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவு ம் தேவையில்லாத கவ லை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத் தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரி தாகத் தெரியும். இது ஒப்ரிக் கல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல் லோருக்கும் ஒரே அளவு இரு க்க வேண்டும் என்று அவசி யமும் இல்லை.
போலி டாக்டர்களும் மருந்து தயாரிப்பவர்களும் இந்த பயத் தையும் தாழ்வு மனப்பான் மையையும் பயன்படுத்திக் கொண்டு ‘‘சிறு வயதில் செய்த கோளாறுகள் காரணமாக ஆணுறுப்பு சுருங்கி விடு கிறது’’ என்று மேலும் அதிகம் பயங்காட்டி காசு சம்பாதிக்கிறார்கள். ஆனால் 18 வயதுக்கு மேல் உடல் உறுப்புக ளின் வளர்ச்சி நின்று விடுகிறது. அதற்குப் பிறகு சிறிதாகாது என்பதுதான் உண்மை. மேலும் எந்த மருந்து மாத்திரைகள் மூல மும் உடற்பயிற்சி மூலமும் ஆண் பிறப் புறுப்பை வளர்க்க முடியாது என்பதும் விஞ்ஞான ரீதியான உண்மை.
இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்க ளுக்கும். அது சிறிதாக இரு  ப்பதற்கும் பெ ரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்த மில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வள வு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறா ன் என்பது தான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.
பொதுவாக இதுபோன்ற பயங்க ளும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ஆகு ம்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத் திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணைமீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலு ம் தடுக்க முடியாது.

கர்ப்பிணிகளுக்கு பயன் தரும் சுரைக்காய்

Posted On Aug 12,2012,By Muthukumar
 suraikai suraikai1

Thursday 9 August 2012

தாம்பத்தியத்தை தள்ளிப்போடுவதில் ஆண்களைவிட பெண்களே அதிகம்!

படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு என க்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியி ல்லை, எனக்கு வேலை இருக்கு போன் ற பல காரணங்களை சொல்லி துணை யின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம்.
தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக் குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ்  போன்ற காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சி யோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் சாக்கு  போக்கு காரணமாக என்ன நிகழ்க்கிறது. துணையின் பிரச்சினையை எப்படி போக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுண ர்கள் படியுங்களேன்.
எனக்கு டயர்டா இருக்கு
வீட்டில் வேலை எல்லாம் முடித்து விட்டு படுக்கை அறைக்கு வரும் பெண்கள் சிறிதுநேரம் சந்தோசமா க இருக்கலாம் கணவரின் அருகில் நெருங்கினாலே புஸ் என்று ஆகிவிடும். அவர் குறட்டை சத்தத்தோ டு தூங்கிப்போயிருப்பார். இருந்தா லும் லேசாக தொட்டு ஆசையை வெளிப்படுத்தினால், ப்ளீஸ்மா இன்னைக்கு எனக்கு ரொம்ப வேலை அதனால் ரொம்ப டயர்டா இருக்கு என்று சாக்குப் போக்கு கூறிவிட்டு படுத்துவிடு வார். இதனால் மனம் தளர வேண்டாம் உங்க ளவரை உற்சாகப்படுத்துங்கள். சின்னதாய் மசாஜ்செய்து அவரின் சோர் வினை போக்குங்கள் உங்களின் டச் தெர பியில் ஆட்டோமேடிக் ஆக அவரின் சோ ர்வு இருந்த இடம் தெரியாமல் பறந்து போய் விடும். அப்புறம் என்ன உங்கள் வழிக்கு வந்துதானே ஆக வேண் டும்.
பீரியட்ஸ் வரப்போகுது
படுக்கை அறையில் பெரும்பாலான பெ ண்கள் கூறும் சாக்குப்போக்கு இது தான். இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு பீரியட்ஸ் வரப்போகுது அத னால் எனக்கு கை, கால் வலிக்குது என்னால இன்னைக்கு முடியா து என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார்கள். இது ஆண்களின் ஆசை தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு எங்க வலிக்குது நான் பிடிச்சு விட ட்டா என்று நைசாக பேசி கை, கால் அமுக்கி விடுவதைப்போல செய்து காரியத்தை சாதித் து விடலாம் என்று ஆலோசனை கூறுகின் றனர் நிபுணர்கள்.
நான் கோபமா இருக்கேன்
பெரும்பாலான வீடுகளில் தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சண்டைகள் பூதாகரமாக மா றுவது படுக்கை அறையில்தான். சமாதானம் என்ற பெயரில் கூடலுக்காக நெருங்குகையில் நான் கோபமா இரு க்கேன். என்னை தொந்தரவு செய்யாதே என்ற ரீதியில் முதுகை காட்டிக்கொண்டு படுத்து விடுவார்கள். அப்படியே விட்டுவிட்டால் சிக்கல் பெரிதாகிவிடும் எனவே ஈகோ பார்க்காமல் தம்பதியரில் யா ரோ ஒருவர் சரண்டராகத்தான் வே ண்டும். ஊடலுடன் தொடங்கி பின் னர் கூடலில் முடியும் அந்த உறவி ன் சுகமே அலாதியானதுதான். செல்லக் கோபம், சிணுங்கள் என ஆரம்பித்து இனிமே அப்படி நடக் காமல் பார்த்துக்கிறேன் என்று மன்னிப்பு கேட்பது வரை நீடிக்கு ம்.
தலை வலிக்குது இன்னைக்கு வேண்டாமே!
சில நேரங்களில் தம்பதியர் இருவருமே கூறும் வார்த்தை தலை வலி. தேவையற்ற பிரச்சினைகளை மனதில் போட்டு அழுத்திக்கொ ண்டு அதை படுக்கை அறைவ ரைக்கும் கொண்டு போவதி னாலேயே மகிழ்ச்சியான அந் த தருணம் கூட மண்ணாகிப் போய்விடும். மனைவிக்கு ஆசை இருந்து கணவருக்கு தலைவலியினால் மூடு இல் லாமல் போனால் அவ்வளவு தான். அதற்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட வேண்டாம். தலையை அழுத்தி பிடித்துவி ட்டு தலையில் மசாஜ் செய்யலாம். மேலும் எந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் விரல்களால் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தால் சில நிமிடங்களில் வலி காணமல் போய்விடும். பணிச் சுமையினா ல், தலைவலி அதிகமானால் காற்றாட இருவரும் பேசிக் கொ ண்டிருந்து விட்டு பின்னர் படுக் கை அறைக்குள் நுழை யலாம்.
எனக்கு நேரமே இல்லை
எப்பொழுது பார்த்தாலும் வே லை பற்றிய நினைப்புதான். அலு வலக வேலையைக் கூட வீட்டி ல் கொண்டு வந்து செய்துவிட்டு பின்னர் குடும்பத்தை கவனிக்க நேரம் இல்லை என்று புலம்புபவர்கள் இருக்கின்றனர். மனைவி ஆசையாக நெருங்கினாலேபோதும் எனக்கு நேரமே இல்லை ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன் என்று கெஞ்சுவார்கள். உண்மையில் புரிந்து கொள்ளவேண்டியது நீங்கள்தான். நேரமில்லை என்று கூறுவதை விட மனைவி, குழந்தைகளுக்கு சில மணி நேரங்களை ஒதுக்குங் கள். இல்லையெனில் ஒதுக்கப்பட்டு விடுவீர்கள் என்று எச்சரிக்கி ன்றனர்.


Wednesday 8 August 2012

அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் சப்போர்ட்டா இருக்கும் சப்போட்டா!

வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்புண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ 
(sapota) என்றும் ‘சப்போடில் லா’ (sapodilla) என்றும் கூறப் படுகிறது . இதன்
தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப் போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு.
* சீமை இலுப்பை
‘சப்போட்டா’ என்ற ஆங்கிலப் பெயரையே பெரும்பாலும் தமிழில் சப்போட்டா என்று பேச்சு வழக்கில் சொல்லியும், எழுதியும் வருகி றோம். இதன் தூய தமிழ்ப்பெயர், ‘சீமை இலுப் பை’ ஆகும். இலுப்பைப் பழத்தைப்போல் உரு வமுடையதால் இப்பெயர் வந்தது. ஆனால், இலுப்பைப் பழத்தை விட அளவில் பெரியது சப்போட்டா பழம்.
* பயிரிடப்படும் மாநிலங்கள்
இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படு கிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜரா த்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிற ப்புப் பெயர் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நா டு , கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பரப்பளவில் சப்போட்டா பயிரிடப்படு கிறது.
* வகைகள்

சப்பேட்டா பழத்தில் உருண்டை வடிவம், முட்டை வடிவம்போன் ற பல வகைகள் உண்டு. இதே போல், சிறியளவு, பெரிய அளவு கொண்டதும் உள்ளன. இவற்று ள், சிறிய அளவு கொண்டது நாட் டு இரக ங்கள். பெரிய அளவு கொண்டது, அதிக விளைவு தரு வதாகும். இவை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இரண்டிலும், பெரும்பான்மையும், ஒரே மாதிரியான சத்துக்கள் அட ங்கி உள்ளன. ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உயர் விளைச் சல் தரும் வகைகள் கோல்கத்தா ரவுண்ட், பாதாம், கிரிக் கெட் பால், துவார புரி, கீர்த் திபத்தி, ஓவர் முதலியன ஆகும்.
* சத்துப் பொருட்கள்
நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழ த்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப் பொருள் 21.4 கிராம், கால் சியம் 2*.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச்சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவி ன் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.
* எப்படிச் சாப்பிடலாம்:
சப்போட்டா நன்கு பழுத்தபின், நன்கு கழுவிச் சுத்தம் செய்து, உள்ளி ருக்கும் கறுப்புநிற விதைகளைக்களைந்து விட் டு, சாப்பிட வேண்டும். பழங்களில் மிகு ந்த இனிப்புச் சுவை கொண்டது சப்போ ட்டா தான். பழக்கூழ், ஜாம், சிரெப், கா ண்டி முதலியன தயாரித்துச் சாப்பிட லாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச் சின பால்சேர்த்து சப்போட்டா கீர்’’ செய் து பருகலாம். சப்போட்டா பழத்தைக் கொண்டு பாயசம், கேசரி, பர்பி முதலியன தயாரித்து இனிப்புப் பலகாரமாக சாப்பிடலாம்.
* மருத்துவப் பயன்கள்
நமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்ப தத்தைத் தன்னுள் கொண்ட சப் போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்க லாம். ஒல்லியாக இருப்பவர்களுக் கு புறங்கை மற்றும் முழங்கையி ல் நரம்பு புடைத்து கொண்டு, மு ண்டு முண்டாகத் தெரியும். இதற் கு தீர்வு தருகிறது சப்போட்டா.
தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப் பதற்கு முன் கை, முழங்கை, விரல் களில் நன்றாகப்பூசுங்கள். சப்போட் டாவில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன் பூசினாற்போ லவும் காட்டும்.
ஒட்டிய கன்னங்கள், மொழு மொழு வென பிரகாசிக்க வேண்டுமா? சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ் பூன் சந்தன பவுடர் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக பூசுங் கள். தடவிக் கொண்டிருக்கும்போ தே இந்த பேஸ்ட் உலர்ந்துவிடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேயுங் கள். பிறகு சூடான நீரில் முகத்தை க் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவெ ன மின்னுமே கன்னம் ‘எனக்கு ஆப்பிள் கன்னம்தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே..” என்கிறவர்கள், ஒரு டீஸ்பூன் கனிந்த சப் போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் ‘பேக்’  போட் டு, பத்து நிமிடம் கழித்து கழுவுங் கள். வாரம் இருமுறை இப்படி செய் தால் ‘ப்ளீச்’ செய்தது போல முகம் பளி ச்சென்று இருக்கும்.
கொத்து கொத்தாக முடி கொட்டுகிற தே..’ என்று கவலைப்படுகிறவர்களு க்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’.ஒரு டீஸ்பூன் சப் போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள். இந்த தைல த்தை பஞ்சில் நனைத்து, தலை யில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிற கு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந் தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக் கும்.
கண்டிஷனராகவும் கலக் குகிறது சப்போட்டா. காய வைத்த சப்போட்டா தோ ல் 100 கிராம், சப்போட்டா கொட்டை 50 கிராம். இரண்டையும் சேர்த் து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொட்டை எடுத்த புங்கங் காய் 100 கிராம், கொட்டை எடுத்த கடு க்காய் 10 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம், வெந்தயம் 100 கிராம்.. என எல்லா வற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக் காய்க் கு பதிலாக இந்த பவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி முடி பிளவு குறைவது டன், முடியின் வறட்டுத் தன் மை நீங்கி, பளபளப்பு கூடும்.
ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ் பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விள க்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்க ளில் தடவி, குளியுங்கள். தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்!சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொ ழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெ ரிச்சல், மூல நோய் மற்று ம் மலச்சிக்கலுக்கும் தீர்வு தந்து, சிறந்த நோய் நிவாரணியாக செய ல்படுகிறது. உடம்பு சூட்டை தணித்து, குளிர்ச்சி தருகிறது. 100 கிராம் சப்போட்டா பழத்தி ல் 28 மி.கிராம் கால்சியமு ம், 27 மி.கிராம் பாஸ் பரஸூம் இருக்கிறது. தினமும் 2 சப் போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.
பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப் போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும்.சப்போட்டா பழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கல ந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும்.சப்போட்டா உடம்பில் உள் ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும்.சப்போட்டா பழத் தை அப்படியே சாப்பிட பிடிக்காத வர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பி டலாம்.
2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறு வது குணமாகும். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்க ள், சப்போட்டா ஜூஸை குடித் துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் கண்களை தழுவும்.பனைவெல்லம், சுக்கு , சித்தரத்தை மூன் றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகி யம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்தவேகத்தில் காணா மல் போய்விடும்.
சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்க ளும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர் களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழ ங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.
இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்தி ற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண் ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.
சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன் மையது.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதி யான நித்திரைதான்.
ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப் போட்டா பழக்கூழ்குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகு ம்.
மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட் டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து.
பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போ ட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்தமயக்கத்திற்கும் இது நல் மருந்து.

சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ் சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு கா ய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்ச ல் குணமாகும்.
சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது.

இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக் கள் கணிசமாக இருப்பதால், எலும்பு களை வலுப்படுத்தும்.
சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழ ச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குண மாகும்.
சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டுவந்தா ல், மேனியைப் பளபளப்பாக வைக்கு ம்.